அவதூறு செய்தி எதிரொலி: தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு மரணதண்டனை விதித்த வடகொரியா
கடந்த பல ஆண்டுகளாக வடகொரியாவும் தென்கொரியாவும் மோதிக் கொண்டிருக்கும் நிலையில் அணு ஆயுத சோதனை மூலம் தென்கொரியாவை வடகொரியா பயமுறுத்தி வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருப்பதால் அமெரிக்கா மீதும் வடகொரியாவுக்கு ஆத்திரம் உள்ளது.
இந்த நிலையில் வடகொரியா வெளியிட்ட புத்தகம் ஒன்றுக்கு அவதூறு அளிக்கும் வகையில் மதிப்புரை வெளியிட்ட தென்கொரிய பத்திரிகையாளர்கள் 4 பேர்களுக்கு வடகொரியா மரண தண்டனை விதித்துள்ளது.
இதற்கு உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.