shadow

புளூவேல் கேமை ஷேர் செய்தால் ஜெயில்: தமிழக அரசு உத்தரவு

புளூவேல் கேமை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை தானாகவே முன்வந்து தொடர்ந்த வழக்கில் இன்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணைக்கு பின்னர், ப்ளூ வேல் கேமை எந்த விதமாக பகிர்ந்தாலும் அல்லது அந்த கேமை விளையாடும் சூழலை ஏற்படுத்தினாலும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவால் இனிமேல் யாராவது இந்த கேமை பகிர்ந்தால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புளூவேல் கேமை வைத்திருப்பவர்கள் உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என்றும், வேறொருவருக்கு பகிராமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply