ஏப்ரல் 30 வரை விமான சேவை ரத்து: அதிரடி அறிவிப்பு

இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து ஏப்ரல் 15ம் தேதி முதல் சில தனியார் விமான நிறுவனங்கள் முன்பதிவை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் அதிரடி முடிவாக தற்போது ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 30ஆம் தேதிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது

இருப்பினும் சில தனியார் விமான நிறுவனங்கள் விமான சேவையை ஏப்ரல் 15 முதல் தொடர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

Leave a Reply