சென்னையில் மழை இல்லை: விடுமுறை ரத்து செய்யப்படுமா?

சென்னையில் நேற்று முழுவதும் கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் மழை நன்றாக வெளுத்து வாங்கியது

இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அவர்கள் அறிவித்திருந்தார்

இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் மழை இல்லை. சாலைகளில் இருந்த விழும் மழை நீரும் ஓரளவுக்கு வடிய தொடங்கிவிட்டன

எனவே சென்னையில் மழை இல்லாத காரணத்தினால் அறிவிக்கப்பட்ட பள்ளி கல்லூரி விடுமுறைகள் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

இருப்பினும் இதுவரை பள்ளிகள், கல்லூரிகள் இன்று மீண்டும் இயங்கும் என்ற அறிவிப்பு வெளிவரவில்லை, என்றாலும் இனிமேல் வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply