shadow

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல், மதுபானம் கிடையாது!

ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு டாஸ்மாக் கடையில் மது அளிக்கப்படமாட்டாது எனவும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அளிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

கரூர் மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் அரசு அலுவலர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எந்தவித சேவையும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது