குழந்தை பிறந்தவுடன் பணிக்கு திரும்பிய் ஐஏஎஸ் அதிகாரி
அரசு அலுவலர்களுக்கு குழந்தை பிறந்தால் ஆறு மாதம் பிரசவ விடுமுறை இருக்கும் நிலையில் ஒரே மாதத்தில் பிரசவ விடுமுறை தனக்கு வேண்டாம் என்று கூறி பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரியின் செயல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வரும் ஸ்ரீஜனா என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குழந்தை பிறந்தது. அவருக்கு இன்னும் 5 மாதம் விடுமுறை இருந்தபோதிலும் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையுடன் அலுவலகத்திற்கு வந்து விட்டார்
கைக்குழந்தையை ஒரு கையில் வைத்துக்கொண்டு இன்னொரு கையில் அவர் அலுவலக பணிகளை செய்து கொண்டு இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த அதிகாரிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.