shadow

அதிமுக என் கட்சி: என்னை யாரும் வெளியேற்ற முடியாது. டிடிவி தினகரன்

இரட்டை இலையை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஜாமீன் பெற்று தற்போது சென்னை திரும்பியுள்ளார். இந்த நிலையில் சசிகலா, தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சியை தொடர்வோம் என்று கூறிய அதிமுக அமைச்சர்கள், தற்போது தினகரனை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக ஒரு பெரிய இயக்கம் என்றும் அதில் நானும் ஒரு முக்கிய அங்கம் என்றும் கூறிய டிடிவி தினகரன், என்னை துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் கூறினார். மேலும் கட்சியில் உள்ள அனைவரையும் நமது கட்சிக்காரர் என்ற கோணத்தில் தான் பார்ப்பவன் என்றும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்றும் கூறியுள்ளார்.

ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும். கட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஒதுங்கியிருந்தேன். ஆனால் அவ்வாறு இல்லை. அதனால் தொண்டர்கள் உதவியுடன் கட்சியை இணைக்க நானும் முயற்சி செய்வேன் என்றும் டிடிவி தினகரன் மேலும் கூறியுள்ளார். கூறினார்.

Leave a Reply