shadow

‘அயன் 2’ இல்லை. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.வி.ஆனந்த்

கடந்த 2009ஆம் ஆண்டு சூர்யா, தமன்னா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய வெற்றிப்படம் ‘அயன்’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கே.வி.ஆனந்த் இயக்கவேண்டும் என்று சூர்யாவின் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் ‘அயன் 2’ படம் உருவாகவுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக கோலிவுட்டில் ஒரு வதந்தி நிலவி வந்தது. இதனால் கடுப்பான சூர்யா ரசிகர்கள், கே.வி.ஆனந்தை விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வதந்திக்கு தற்போது கே.வி.ஆனந்த் விளக்கமளித்துள்ளார். எனது அடுத்த படம் ‘அயன் 2′ என்று வெளியான செய்தியில் உண்மையில்லை. எனது அடுத்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றேன். இந்த படம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாத நிலை உள்ளது. மிக விரைவில் எனது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும்’ என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்த வதந்திக்கு கே.வி.ஆனந்த் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply