shadow

சரணடையுங்கள், முன் ஜாமின் தர முடியாது: ப்ரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு உத்தரவு

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ப்ரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த வழக்கில் தங்களை கைது செய்யக் கூடாது என முன்ஜாமீன் கேட்டு மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்றும் உடனடியாக சரணடையுங்கள் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்