3 மாத குழந்தையுடன் சாலையில் ஓடிய தாய்

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தாயின் 3 வயது குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தையின் தந்தை ஆம்புலன்ஸுக்கு போன் செய்தார். ஆனால் ஆம்புலன்ஸ் அந்த பகுதிக்கு வர மறுக்கப்பட்டதால் வேறு வழியின்றி குழந்தையின் தாய் தனது குழந்தையை தோளில் சுமந்து கொண்டு மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு சாலையில் மருத்துவமனை நோக்கி ஓடிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

இருப்பினும் அவர் மருத்துவமனை போய் சேருவதற்குள் அந்த குழந்தை இறந்து விட்டதாகவும் ஆம்புலன்ஸ் வர மறுக்கப்பட்டதால் தான் குழந்தையின் உயிர் பலியானதாக கூறப்படுகிறது

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply