shadow

விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் சிலர் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் நடைபெறும் 2022ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளபதி அவர்களின் உத்தரவுபடி தளபதி விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணி ஆதரவு இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது.

எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள், அனைத்து மாவட்ட தலைவர்களும், அணித் தலைவர்களும், ஒன்றிய நகர பகுதி தலைவர்களும் நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சென்று, நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.