நித்தியானந்தாவின் முக்கிய சீடர் தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி காரணம்

நித்தியானந்தாவின் முக்கிய சீடர்களில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் தோல்வி காரணமான அவர் தூக்கில் தொங்கியதாக அவருடைய வாட்ஸ் அப் வீடியோ பதிவு ஒன்று தெரிவிக்கின்றது

பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நித்தியானந்தாவின் 3 சீடர்கள் ஏற்கனவே மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நான்காவதாக ஒரு சீடர் தற்போது தற்கொலை செய்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆரகலூர் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற 27 வயதான வாலிபர் முதுகலை பொறியியல் பட்டதாரி என்பதும், கடந்த 2017ஆம் ஆண்டு நித்தியானந்தா ஆசிரமத்தில் சீடராக சேர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நித்யானந்தாவின் பெண் பக்தை ஒருவரை காதலித்து வந்ததாகவும் இந்த காதல் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது வாட்ஸ் அப் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது

Leave a Reply