நித்தியானந்தா ஆசிரமம் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு
குஜராத் மாநிலம் ஹீராப்பூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை அம்மாநிலத்தின் மாவட்ட நிர்வாகம் இன்று திடீரென மூடியது
நித்தியானந்தா ஆசிரமம் மீது பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தனியார் பள்ளியில் சட்டவிரோதமாக ஆசிரமம் செய்யப்பட்டதாக புகார் இருந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆசிரமத்தை என்று மூடியுள்ளதாகவும், இதனை அடுத்து ஆசிரமத்தில் தங்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
நித்தியானந்தா மீது பல்வேறு பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.