shadow

கடுமையான உழைப்புக்கு கிடைத்த முதல் கட்ட பலன் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை மற்றும் கட்சி சொந்தங்கள் அனைவரும் கடுமையான உழைப்புக்கு கிடைத்த முதல் கட்ட பலனை இந்த தேர்தலின் முடிவில் காண முடிகிறது என்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் 132 வார்டுகளிலும் நகராட்சிகளில் 51 வார்டுகளிலும் மாநகராட்சிகளில் பதினோரு வார்டுகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.