shadow

நிர்மலாதேவி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் ஒருபுறமும், கவர்னர் அமைத்த கமிஷன் இன்னொரு புறமும் விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை பொறுத்தவரையில் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அவ்வாறு விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும்.

இதில் தொடர்புடையவர்கள் அரசு அதிகாரிகளா? அரசியல்வாதிகளா? என்பது தெரிய வரவேண்டும். இந்த விஷயத்தில் கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்

Leave a Reply