shadow

திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிலும் குறைபாடுகள். திமுக அதிர்ச்சி

dmkசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் இந்த தீர்ப்பில் பல பிழைகள் இருப்பதாக கூறி சமீபத்தில் கர்நாடக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவில் பத்துவிதமான குறைபாடுகள் இருப்பதாகவும், அதை திருத்தி மனுதாக்கல் செய்யுமாறும், உச்சநீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டார். இதனால் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து சமீபத்தில் திமுகவும் தனது பங்குக்கு மேல்முறையீடு செய்தது.  திமுக தரப்பு மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அதிகாரிகள், இந்த மனுவிலும் 9 முக்கிய குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை சரி செய்து, திருத்தப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு திமுக தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1. திமுக தாக்கல் செய்துள்ள மனுவில் இணைக்கப்பட்டு இருக்கும் பிரமாணப்பத்திரத்தில் கோரப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் விடுபட்டுள்ளன.

2. பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆவணங்களை தர வரிசைப்படி குறிப்பிடப்பட‌வில்லை.

3. வழக்கில் அன்பழகன் தொடர்பாக உச்சநீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் தீர்ப்பாணைகள் முழுமையாக இணைக்கப்படவில்லை.

4. வழக்கு தொடர்பான அரசாணைகள், வழிகாட்டுதல்கள், விசாரணை நீதிமன்றத்தில் முக்கிய குறிப்புகள், அரசு சான்று ஆவணங்கள் மனுவுடன் இணைக்கப்பட‌வில்லை’

மேற்கண்ட நான்கு முக்கிய குறைபாடுகளுடன் மேலும் ஐந்து குறைபாடுகளையும் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இந்த குறைபாடுகள் நீக்கிய பின்னர் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுவை மீண்டும் சரிபார்த்த பிறகே குற்றவியல் வழக்கு எண்கள் ஒதுக்கப்பட்டு, வழக்கை விசாரிக்கப் போகும் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் இந்த நடைமுறைகள் முடிய ஒரு மாத காலம் வரை கால அவகாசம் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதமாக வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply