கட்டையால் அடித்து கொலை
கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் எந்தவித குற்றச்செயல்களும் நடைபெறாத நிலையில் மதுக்கடைகள் திறந்ததும் குற்றச்செயல்கள் ஆரம்பித்துவிட்டது
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு திருமங்கலம் பழங்குடி கிராமத்தை சேர்ந்த பாபு மற்றும் அவரது நண்பர் பேபி இருவரும் மதுபோதையில் சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விஜயன் என்ற தொழிலாளி அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரபு மதுபோதையில் கீழே கிடந்த கட்டையை எடுத்து சண்டையை தடுக்க வந்த விஜயன் தலையில் அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த விஜயன் சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். மதுபோதையில் சண்டை போட்டவர்களை தடுக்க முயன்ற விஜயன் பரிதாபமாக பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.