shadow

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இந்த நிலையில் மேலும் 5 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் ’மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் அதிககனமழை வரை பெய்யும் என அறிவித்துள்ளார்.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது