shadow

வங்கி நிர்வாகிகள் போல் பேசி ஓடிபி எண்ணை பெற்று வங்கியிலிருந்து பணம் எடுக்கும் கூட்டம் ஒன்று இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது ஓடிபி எண்ணை கேட்கும் புதுவிதமான ஒரு மோசடி நடந்து வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது

உங்களுக்கு வரும் அழைப்பில் ஹலோ சார் அல்லது மேடம் நான் பெங்களூரில் இருந்து பேசுகிறேன். யுபிஎஸ்சி தேர்வு எழுத என்னுடைய நம்பருக்கு பதிலாக தவறுதலாக உங்களுடைய நம்பரை மாற்றி கொடுத்து விட்டேன். உங்கள் தொலைபேசிக்கு வரும் ஓடிபி எண்ணை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று யாரேனும் கேட்டால் தயவுசெய்து கொடுத்து விடாதீர்கள்

உங்கள் வங்கி கணக்கில் மோசடியாக ஈடுபடும் நபர்கள் இம்மாதிரி பொய்யான தகவலை கூறி மோசடி செய்து வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.