shadow

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மீது புதிய வழக்கு. ஜெயலலிதா அறிவிப்பு

jayalalithaஏற்கனவே காவிரி வழக்கில் நடுவர் மன்ற தீர்ப்பை விரைவில் அமலபடுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் புதிய இடைக்கால வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் இதுகுறித்து தமிழக அரசு சட்டப்போராட்டதை மேற்கொண்டால் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. தமிழக விவசாயிகள் சங்கமும் கர்நாட அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக புதிய இடைக்கால வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா சற்று முன்னர் விதி 110ன் கீழ் அறிவித்துள்ளார்.

இந்த புதிய வழக்கு மூலம் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநிலத்திடம் இருந்து பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply