டீ குடித்தால் முதல்வர் பதவி பறிபோகுமா? ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்
பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோது, ‘.பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருக்கும்போது, அவருடன் அமர்ந்து டீ குடித்தேன். அவரது முதல்வர் பதவி பறிபோனது. தற்போது, எடப்பாடி பழனிசாமியுடன் அமர்த்து டீ குடித்துவிட்டு வந்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சை வைத்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஒரு முதல்வருடன் உட்கார்ந்து டீ குடித்தால் பதவி பறிபோய்விடும் என்றால் இவர் எத்தனை முறை கருணாநிதி முதல்வராக இருந்தபோது டீ குடித்திருப்பார். அப்படியானால் கருணாநிதி பதவி ஏன் பறிபோகவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஸ்டாலின் அவர்களின் முதிர்ச்சியற்ற அரசியல் தன்மையையே இது காட்டுவதாக தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.