நெட்டிசன்கள் கேள்வி

சமீபத்தில் தலைமைச்செயலாளரை டிஆர் பாலு, தயாநிதி மாறன் உள்பட திமுக பிரமுகர்கள் சந்திக்க சென்றபோது தலைமைச்செயலாளர் தங்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து டிஆர் பாலு கூறியபோது, ‘நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

தயாநிதி மாறனின் இந்த பேச்சு குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல்

இதுகுறித்து நெட்டிசன்கள் கூறியதாவது: ரஜினி என்ன சொன்னாலும் செய்தாலும் எதிர்ப்பு. ஆனா திமுக இப்படி தவறாக பேசினாலும் “தோழமை சுட்டுதல்”னு முட்டுக் கொடுத்தல்’ என்று கூறியுள்ளனர்.

Leave a Reply