shadow

விஜய்யின் அடுத்த படத்திலும் ஒரு ‘நெருப்புடா’ பாடல்

arun kamarajசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட ரசித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இந்த பாடலை எழுதி பாடியவர் அருண்காமராஜ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் ஏற்கனவே விஜய்யின் ‘தெறி’ உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதி பாடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று திடீரென அருண்காமராஜூக்கு இளையதளபதி விஜய்யிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இந்த சந்திப்பின்போது ‘விஜய் 60’ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இருந்ததாகவும், ‘கபாலி’யில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடல் போல ஒரு பாடலை எழுதி, பாட அருண்காமராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யுடன் நடந்த சந்திப்பை மட்டும் தற்போதைக்கு அருண்காமராஜ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் @actorvijay anna thank u so much for the surprise call, you made my day.Extreme happiness u have given me by ur encouraging words #iamflying என்று பதிவு செய்துள்ளார்.

எனவே வெகுவிரைவில் ‘நெருப்புடா’ பாடல் போல ஒரு பாடலை விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதுஜ்.

Leave a Reply