shadow

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் நயன்தாரா சொந்த குரலில் டப்பிங் செய்கிறார்.

ஏற்கனவே அவர் ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்திற்கும் சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளார்.

நயன்தாரா டப்பிங் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் ’கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய டயலாக்கை நீயே டப் பண்றது மிகுந்த சந்தோஷம்’ என்று கூறியுள்ளார்.

நயன்தாரா டப்பிங் செய்யும் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.