கலெக்டரா? போலீஸ் அதிகாரியா? நயன்தாராவின் குழப்ப்ம்
கோலிவுட்டின் பிரபல நடிகை நயன்தாரா முதன்முதலாக தயாரிக்கும் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக செய்திகள் வந்தது. ‘காத்து வாக்குல காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நயன்தாரா இந்த படத்திற்கு முன்னதாக இன்னொரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனர் ஜெகன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா கலெக்டராக நடிக்கவுள்ளதாகவும், போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் மாறுபட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
நயன்தாரா தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘இருமுகன்’ மற்றும் ‘காஷ்மோரா’ படங்களின் படப்பிடிப்புக்கு பின்னர் இந்த படம் தொடங்கப்படும் என தெரிகிறது. மேலும் அவர் ‘டிக் டிக் டிக்’ என்னும் திகில் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.