நரேந்திரமோடி பிரதமராக இன்று பதவியேற்க உள்ள மாபெரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று டெல்லி வந்தடைந்தார்.
பாகிஸ்தான் அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் பதிபர் நவாஸ் ஷெரிப், இந்தியாவுடனான நட்புறவு தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேபோல் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இன்று டெல்லி வந்தடைந்தார். இரு தலைவர்களுக்கும் டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகத்தலைவர்கள் வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லியில் வைகோ கருபுக்கொடி போராட்டம் நடத்தி வருகிறார்.
தமிழகத்தின் இருந்து பெரும்பான்மையான தலைவர்கள் பிரதமர் பதவியேற்புவிழாவை புறக்கணித்திருக்கும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டும் தன் மனைவி மற்றும் மச்சானுடன் விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ளார்.
அதுபோலவே பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் அன்புமணி ஆகியோர்களும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.
இன்று மாலை டெல்லியில் மிகப்பிரமாண்டமாக மோடி பதவியேற்கும் விழா நடைபெற உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.