சசிகலா கணவர் நடராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் ஏற்கனவே சமீபத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்துள்ள நிலையில் நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நடராஜன் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் நடராஜனின் உடல்நலம் குறித்த விசாரிக்க ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.