ரஜினி ரசிகர்கள் என்னை விட வயதானவர்கள், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது: நாஞ்சில் சம்பத்

ரஜினி, கமல் அரசியல் குறித்து நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் கூறியபோது தமிழக அரசியலில் கமல்ஹாசனால் ஒன்றும் செய்யமுடியவில்லை, அவருடைய மய்யம், மய்யத்திலேயே நின்றுவிட்டது. அதேபோல் ரஜினி எந்த ஒரு அரசியல் ரசாயன மாற்றத்தையும் செய்ய முடியவில்லை என்பது உறுதியாகிவிட்டது

ரஜினி ரசிகர்கள் எல்லோரும் என்னுடைய வயதை தாண்டியவர்கள். அவர்களால் இனிமேல் என்ன செய்யமுடியும்? என்று நாஞ்சில் சம்பத் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார்

அதேபோல் அதிமுகவையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்து தற்போது முடிந்தவரை சுருட்டலாம் என்று அவர்கள் எண்ணம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply