சென்னை : நான் இயக்குனர்களின் நடிகன் என்று விஜய்சேதுபதி சொன்னார். சென்னையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர் கூறியதாவது:
தற்போது ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மெல்லிசை’, எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் உட்பட 7 படங்களில் நடித்து வருகிறேன். இதற்கு மேலும் ஒரே நேரத்தில் நடிப்பது சிரமம் என்பதால் இப்போது கதை கேட்கவில்லை. இருக்கும் படங்களை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
எந்த பின்புலமும் இல்லாமல் ஹீரோவாக வருவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இப்போது வந்திருப்பதற்கு காரணம் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதுதான். நான் இந்த அளவுக்கு நடித்திருக்கிறேன் என்றால் அது இயக்குனர்கள் சொல்லிக் கொடுத்தது. அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கேரக்டரை நான் பூர்த்தி செய்திருக்கிறேன். நான் எப்போதுமே இயக்குனர்களின் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன்.
தயாரிப்பாளர் ஆகும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ‘சங்குதேவன்’ படம் ஜேஎஸ்கே நிறுவனத்துக்காக முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து தர ஒப்புக் கொண்டிருந்தேன். இப்போது கையில் நிறைய படங்கள் இருப்பதால் அந்தப் படத்தை தள்ளி வைத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.