shadow

vijaysethupathi
விஜய் நடித்த ‘புலி’ படத்துடன் மோதும் துணிச்சலான முடிவை எடுத்துள்ள விஜய்சேதுபதி-நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை ‘புலி’க்கு இணையாக புரமோஷன் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக இந்த படத்தின் பாடல் வரிகளை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அனிருத்தின் இசையில் அமைந்த இந்த பாடல், வித்தியாசமான வரிகளுடன் இருப்பதால் இணையதளத்தில் மிக வேகமாக ஒருவருக்கொருவர் பரிமாறி வருகின்றனர்.

ரெளடி என்றாலே கத்தி, ரத்தம், வன்முறை, வெட்டு, குத்து என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இந்த பாடலின் வரிகளை பார்க்கும்போது, இந்த ரெளடி ஒரு வித்தியாசமான காதல் ரெளடியாக இருப்பார் என நினைக்க தோன்றுகிறது.

அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பாடல் இதுதான்:

காதல் என்பது மாயவலை
கண்ணீரும் கூட சொந்தமில்லை
வலியில்லாமல் வாழும் வாழ்க்கை தேவையில்லை
எனை மாற்றும் காதலே

காதல் என்பது மாயவலை
சிக்காமல் போனது யாரும் இல்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கை தேவை இல்லை

தங்கமே உன்னைத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னை தூக்குவேனே

கத்தியில்லா ரத்தமிலா ரெளடிதான்
காதலிக்க நேரம் உள்ள ரெளடிதான்
வெட்டுக்குத்து வேணாம் சொல்லும் ரெளடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரெளடிதான்.

Leave a Reply