நான் இருக்கின்றேன். கவலைப்பட வேண்டாம். மோடியின் கொடுத்த தைரியத்தால் உற்சாகமான ஓபிஎஸ்
நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஓபிஎஸ், தமிழக தேவை மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா ஆகிய கோரிக்கைகளை விடுத்த பின்னர் அதிமுக குறித்தும் பேசினாராம்.
தனது முதல்வர் பதவிக்கு வைக்கப்பட்டுள்ள ஆபத்து குறித்து ஓபிஎஸ் கூறியபோது, ‘ நான் அனைத்தையும் கவனித்துக் கொண்டு வருகிறேன். நான் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். முதலமைச்சராக உங்கள் பணியை சிறப்பாகச் செய்யுங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என மோடி தைரியம் அளித்தாராம். இதற்கு கு முதலமைச்சரும் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா வருவதற்கு ஓ.பி.எஸ் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஆதரித்துத்தான் அறிக்கை வெளியிட்டிருந்தார். இருந்தும் ஓபிஎஸை முதல்வர் பதவியில் இருந்து இறக்க ஒரு குரூப் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.