shadow

sadhvi deva thakurமுஸ்லீம்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என சிவசேனா கட்சி நேற்று தனது அதிகாரபூர்வமான இதழில் சர்ச்சைக்கருத்து ஒன்றை வெளியிட்டதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் மற்றுமொரு சர்ச்சைக்குரிய கருத்தை இந்து மகாசபை தலைவர் சாத்வி தேவா தாகூர் வெளியிட்டதால் கடும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற சர்சைக்குரிய கருத்தை ஏற்கனவே தெரிவித்த இவர் நேற்றைய செய்தியாளர்களின் பேட்டியின்போது, ‘நாட்டில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரித்துக்க்கொண்டே வருவதாகவும் இதைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும்  நாட்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் எண்ணிக்கையை  தடுக்க மத்திய அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால்தான் அவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் இந்து கடவுள்களின் சிலைகளை வைக்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார்.

இவருடைய சர்ச்சைக் கருத்துக்கள் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறாது.

Leave a Reply