shadow

6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி, பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்த நிலையில் 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பொறுப்புடனும் நிதானமாகவும் விளையாடி பஞ்சாப் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். இறுதியில் மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் மும்பை அணி 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply