shadow

உலக அளவில் சிறந்த தலைவர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் உலகப்புகழ் பெற்ற பார்ச்சூன் பத்திரிகை, உலக அளவில் உள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிட்டு வருகிறது.

இந்த நிலையில், 2018 இந்தாண்டுக்கான சிறந்த தலைவர்கள் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியிலில், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 24வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் இந்தியாவை சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான இந்திரா ஜெய்சிங்கிற்கு 20 வது இடம் கிடைத்துள்ளது.

முகேஷ் அம்பானியைப் பற்றி பார்ச்சூன் பத்திரிகை கூறுகையில், இந்தியாவில் மிகக்குறுகிய காலக்கட்டத்தில் ஜியோ நிறுவனம் மூலம் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

இந்திரா ஜெய்சிங்கை பற்றி அந்த பத்திரிகை குறிப்பிடுகையில், இவர் இந்தியாவில் உள்ள ஏழைகளின் குரலாக ஒலித்து வருவதாகவும், அநீதிக்கு எதிரான போராட்டத்தில் தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர் போபால் விஷ வாயு கசிவு சம்பவத்துக்கு போராட்டம் நடத்தினார். இது தவிர முதல் 50 இடம் பிடித்தவர்களில் 12 பேர் தனியார் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply