வானிலை மையம் அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் இருக்கும் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அம்பன் புயல் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது

குறிப்பாக சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே பகலில் கடும் வெப்பமும் இரவில் அதிக அளவு புழுக்கமும் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply