அதிர்ச்சி தகவல்

கோயம்பேடு சந்தை காரணமாக இதுவரை தமிழகத்தில் 1589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் சென்னையில் மட்டும் நேற்று 399 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 3043 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தொடும் என்றும்,. கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு கோயம்பேடு சந்தையே காரணம் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply