டெல்லியில் வரலாறு காணாத பனிமூட்டம்: 22 ரயில்கள் ரத்து
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான பனி பொழிந்து வருகிறது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக இரவில் கடுமையான பனியின் காரணமாக சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் பனிமூட்டம் இருந்து வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலையில் இருக்கும் பனியால் இரவு நேர போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், 32 ரயில்கள் தாமதமாக கிளம்புவுள்ளதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்டிருக்கும் ரயில்கள் குறித்த தகவல்களை வாடிக்கையாளர் சேவை மைய எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.