shadow

தினகரனின் உழைப்புதான் அவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது. மு.க.அழகிரி

பணம் மட்டும் இருந்தால் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற முடியாது, கடினமான உழைப்பும் இருந்தால் தான் வெற்றி பெற முடியும், அந்த வகையில் தினகரனின் உழைப்புதான் அவருக்கு வெற்றியை தேடித்தந்துள்ள்தாக திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்

வேனில் நின்று கொண்டே ஸ்டாலின் ஓட்டு கேட்டுவிட்டு சென்றுவிட்டார். களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும், அப்போதுதான் வெற்றி பெற முடியும். புதியதாக வருபவர்களுக்கு பதவி கொடுக்கும் வரையும், திமுக செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரையும் திமுக இனி தேர்தல்களில் வெற்றி பெறாது.

திருமங்கலம் ஃபார்முலா என்பது அனைத்து கட்சியினர்களையும் களப்பணி செய்ய வைத்த கடினமான உழைப்பை குறிப்பது, பணம் கொடுப்பதை குறிப்பது அல்ல. நான் எந்த காலத்திலும் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.; என்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் திமுகவில் இணைவேன்’ என்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் மு.க.அழகிரி தெரிவித்தார்.

Leave a Reply