shadow

மோடி இந்தியாவுக்கு வருவது தேர்தலுக்காக மட்டுமே: உத்தவ் தாக்கரே

இந்தியாவில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் மட்டுமே பிரதமர் மோடி இந்தியாவில் இருப்பதாகவும், மற்ற நாட்களில் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பாதாகவும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்ற பாராளுமன்ற தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:

நாட்டை மாற்றிக் காட்டுகிறேன் எனக்கூறி பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு சென்று விடுகிறார். அவர் இங்கு நடைபெறும் தேர்தல்களுக்காக மட்டுமே திரும்பி வருகிறார். தேர்தல்கள் முடிந்ததும் மீண்டும் வெளிநாடு சென்று விடுகிறார்.

இங்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ள உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திடம், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் உங்கள் சொந்த தொகுதியில் தோற்றுப் போனதை அவரிடம் யாராவது எடுத்துக் கூறினால் நல்லது என தெரிவித்தார்.

Leave a Reply