மோடி என்ன பீடா விற்பவரா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்
பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்தேன் என்றும், அவருடைய ஆலோசனையின் பேரில்தான் இரு அணிகளும் இணைந்தன என்றும் சமீபத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஓபிஎஸ் அவர்களின் இந்த பேச்சை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
தமிழக அரசு மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு அடிமையாக இருப்பதாகவும், பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும் விமர்சனம் செய்தனர்
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல. அவர் நாட்டின் பிரதமர். அவருடைய ஆலோசனையை கேட்டு நடப்பது ஒன்றும் தவறல்ல’ என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.