shadow

ஒரே தொகுதியில் மோடி-ராகுல்காந்தி பிரச்சாரம்: குஜராத்தில் பரபரப்பு

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 9,14, ஆகிய இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றன. குறிப்பாக ஆளும் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றது.

இந்த நிலையில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் இன்று ஒரே பகுதியில் பிரசாரம் செய்கின்றார்கள். பிரதமர் மோடி இன்று மோர்பி நகரில் முதல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதை தொடர்ந்து சோமநாதபுரம் அருகே உள்ள பராச்சி என்ற இடத்தில் பிரசாரம் செய்கிறார்.

அதேபோல் ராகுல்காந்தியும் சோமநாதபுரம் பகுதியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். ஏற்கனவே 5 முறை பிரசாரம் செய்துள்ள ராகுல்காந்தி இன்றும், நாளையும் 6-வது முறையாக பிரசாரம் செய்ய உள்ளார். இரண்டு முக்கிய தலைவர்கள் குஜராத்தில் இன்று ஒரே நேரத்தில் பிரசாரம் செய்வதால் அங்கு தேர்தல் பிரசாரம் மிகவும் சூடுபிடித்த நிலையில் உள்ளது.

 

Leave a Reply