எடப்பாடி பழனிச்சாமியா? எடுபிடி பழனிச்சாமியா? ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை, எடுபிடி பழனிச்சாமி என, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேலி செய்யும் வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் சபாநாயகரை கண்டித்து உண்ணாவிரதம் நடந்து வரும் நிலையில் நேற்று திருச்சி செல்லும் வகையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மதுராந்தகத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசினார். அதிமுவின் அராஜக ஆட்சி குறித்து பேசிக்கொண்டிருந்த ஸ்டாலின், பேச்சின் இடையே ‘தற்போது வந்துள்ள ‘எடுபிடி’… மன்னிக்கவும், எடப்பாடி பழனிச்சாமி 5 திட்டங்களை அறிவித்தாரே; அவை ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள்தான். மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் எங்கு இருந்தன என அறிவிக்கும் தெம்பு, திராணி எடப்பாடிக்கு உள்ளதா?,’’ என ஒரு பிடி பிடித்தார்
பேச்சின் இடையே, எடப்பாடியை எடுபிடி என்று ஸ்டாலின் கூறியதால், கூட்டத்தில் இருந்த திமுக.,வினர் விழுந்து விழுந்து சிரித்தனர். எனினும், அவரது பேச்சு அதிமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்த நாள் முதலாக, அவரை சசிகலாவின் பினாமி என்றே கூறிவரும் மு.க.ஸ்டாலின் தற்போது எடுபிடி என்றும் கேலி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.