திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மு.க.அழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மதுரையில் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். மு.க.அழகிரி தனிக்கட்சி ஆரம்பித்து, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பார் என பரவலான கருத்து ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் கலைஞர் திமுக என்ற பெயரில் போஸ்டர் அடித்து மதுரை முழுவதும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திமுக கட்சியின் கொடியின் நடுவே கருணாநிதியின் படத்தை கொண்ட கொடியும் தயாராகிவிட்டது.
கடந்த வாரத்தில் மு.க.அழகிரி பிரதமர் மன்மோகன்சிங், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் வைகோ ஆகியோர்களை சந்தித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களில் அவருடைய ஆதரவாளர்கள் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படாததால் தன்னுடைய பலத்தை திமுக தலைமைக்கு நிரூபிக்க அவர் இன்று அதிரடி முடிவு எடுக்க உள்ளார்.
கலைஞர் திமுக என்ற புதிய கட்சியை ஆரம்பித்து காங்கிரஸ் மற்றும் மதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.