கொரோனா தடுப்பு பணிக்காக முக அழகிரி கொடுத்த நிதியுதவி
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் திமுக தலைவர் மு கருணாநிதியின் மகனுமான முக அழகிரி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார்
ஏற்கனவே திமுக சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முக ஸ்டாலின் இன்று காலை அறிவித்த நிலையில் தற்போது முக அழகிரியும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு
ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.