கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறினாரா பிரகாஷ்ராஜ்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த நிலையில் கன்னடரான ரஜினிகாந்த் எப்படி தமிழக அரசியலுக்கு வரலாம் என்று ஒருசிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனையை மேலும் தூண்டிவிடும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. பிரகாஷ்ராஜ்ஜின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின, சமூக வலைதளங்களில் பிரகாஷ் ராஜ்ஜை விமர்சித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த பிரகாஷ்ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என தான் பேசவில்லை என்றும் தகுதி வாய்ந்த நபர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே ஒரு இந்தியனாக தனது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து தனக்கெதிராக வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் பயம் மற்றும் விரக்தி மனநிலையையே உறுதிப்படுத்துகிறீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.