shadow

நான் ஏன் அவ்வாறு பேசினேன்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் பெண் நிருபரை பார்த்து ‘நீங்க அழகா இருக்கீங்க’ என்று சொன்னதால் ஏற்பட்ட பரபரப்பிற்கு பின்னர் தான் ஏன் அவ்வாறு பேசினேன் என்பது குறித்து விளக்கம்ளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“பொதுவாக அரசியல் கேள்விகளை நான் தவிர்த்துவிடுவேன். அது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் பதிலளிப்பார்கள் என்பதால் அவற்றைத் தவிர்த்துவிடுவேன். துறை ரீதியான எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் எப்போதுமே தயாராக இருந்திருக்கிறேன், இருக்கிறேன். எப்போதும் பத்திரிகையாளர்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் நிலையில்தான் நான் இருக்கிறேன்.

குரங்கணி சம்பவம் தொடர்பாகக்கூட ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒருமுறை ஏதாவது ஒரு பத்திரிகையாளர் என்னைத் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்குமே நான் பதிலளித்தேன். அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். நேற்றைய சம்பவத்தில் அரசியல் கேள்வியைத் தவிர்ப்பதற்காகவே அவ்வாறு பேசினேன். எனது நோக்கம் அதுமட்டுமே. அனைத்து பத்திரிகையாளர்களையும் சகோதர, சகோதரியாகவே கருதுகிறேன். யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. சம்பந்தப்பட்ட சகோதரியிடமே நான் பேசிவிட்டேன்” என்று கூறினார்.

Leave a Reply