அரசு இனி வேடிக்கை பார்க்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அனைவரும் உடனடியாக அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 14 நாட்கள் வெளிநாட்டில் இருந்து வந்த அனைவருமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
இந்த இரண்டையும் செய்யாமல் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் இனியும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுவரை கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதால் இந்த நடவடிக்கையை மிக சீரியஸாக தமிழக அரசு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.