டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திடீர் அனுமதி
இந்திய வெளியுறவு அமைச்சரும் பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை 5 மணியளவில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் இரவு 10 மணியளவில் இதயம் மற்றும் நரம்பியல் நோய் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சுஷ்மாவுக்கு கடுமையான காய்ச்சலும், மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளதோடு நிமோனியா நோய்க்கான அறிகுறிகளும் தென்படுவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
தற்போது அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் இருப்பினும் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் சுஷ்மாவுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து சிறப்பு மருத்துவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனயின் தலைமை மருத்துவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.