நாளைக்குள் பணிக்கு திரும்பாவிடில் நடவடிக்கை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் நேற்று இதுகுறித்த வழக்கு ஒன்றில் உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்
இருப்பினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வகையில் வேலைநிறுத்தம் தொடரும் என அனைத்து முக்கிய தொழிற்சங்கங்களும் உறுதிபட கூறியுள்ளன.
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘அரசுப்போக்குவரத்து ஊழியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் நாளை முதல் 100% பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.