shadow

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை செய்து அதன்பின் அறிவிப்பார் என அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார்.

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே தமிழகத்திலும் விரைவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 31-ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரவு நேர ஊரடங்கு குறித்து ஆலோசனை செய்து அதன்பின் முடிவு எடுப்பார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.